அன்புடன் வரவேற்கின்றேன் நண்பனாக‌

அன்புடன் வரவேற்கின்றேன் நண்பனாக‌

Wednesday, March 7, 2012

எனது பாட்டிக்கு அப்பா எழுதிய‌ கவிதை :...........>

எனது பாட்டியின் (அப்பாவின் அம்மா) பிறந்த‌ நாளுக்கு என் அப்பா எழுதிய கவிதை  :

என் அன்னைக்கு பிறந்த நாள்  : 05.03.2012

Happy Birthday Mom
நான் காணும் இறைவனே,
நான் பிறந்த நாட்முதல்
வாழ்வின்
இன்பத்தை விட
துன்பத்தையே பகிர்ந்தவளே...
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
துணைவருக்கு துணையாய் நின்றவளே
துணைவரின் துயருக்கு
இன்முகத்துடன் தோள் கொடுத்தவளே.........
பணமே உலகமெனும் இவ்வுலகில்
அன்பே உலகமேன்று ‍_ அவ்வுலகமே
நின் துணையே என்று
துணைவரை நேசித்தவளே.........
வளர்ந்தேன் நானும்
நீர் உந்தன்
துணைவர் மீதுக் கொண்ட‌
அன்பை தினமும் பார்த்தே
நானும் அன்பை கற்றேன்..........

என் பள்ளித் தேர்வில்
கூட நான்
தோற்கக் கூடாதென்று
எனக்காய் விரதமிருந்து
இறைவனிடம் வேண்டினாய்.......
நின் துணைவர்
நோயில் வாடிய போதும்
மருத்துவர் கூட யோசிக்கையில்
நீ கொஞ்சமும் தவறாது
நின் கடமையை செய்தாய்
இன்னும் அதிக கவன‌த்தோடு.........
கணவனே உலகமென்று
வீட்டுப் பறவையாய்
வாழ்ந்தாய் நின் வாழ்வில்
காலனும் பொறாமைக் கொண்டு
துணைவனை அழைத்த போதும்.....
துணிந்தாய் எதிர்த்தாய்
ஆதரவற்ற பிள்ளைகளை
அன்பில் அணைத்தாய்
மூன்று பிள்ளைகளையும்
அன்பில் வளர்த்து
பெண் பிள்ளைகளை
பண்பில் செதுக்கி _ அவர்க்கு
தகப்பனாய் பெண் பிள்ளைகளுக்கு
உலகில் கடமை முடித்தாய்...........
நானும் கூட‌
கீழ்ப்படியாமையால்
தோற்றப் போதும்
உலகில் அவமடைந்த போதும்
என் மகன் நல்லவனென்று
எனக்குத் துணையாய்
என் தோல்வியில் நின்றாய்........
என் தோல்விகளில்
தோழமைகள் விலகிய போதும்
உறவுகள் நகைத்த போதும்
என் நஷ்டங்களையும்
ஏற்றுக் கொண்டாய் அன்பினால்........
என் ஏமாற்றங்களில் பங்கெடுக்க‌
என் மனைவிக் கூட‌
மறுத்தென்னை ஒதுக்கிய போதும்
என்னை சுமந்தாய் அன்பினால்.......
என் வாழ்க்கைத் துணையால்
அவமானங்கள் நீர் பட்டபோதும்
என் வாழ்க்கை நலனுக்காய்
இன்றும் தன்னையே உருக்குகின்றாய்.......
இன்று உனது
பிற்ந்த நாள் அம்மா........

என்ன பரிசுக் கொடுப்பேன்
நீ எந்தன் அன்னையானதற்கு
உலகிலுள்ள அனைத்தையும்
உன் காலடியில் வைத்தாலும்
உன் அன்பிற்கு ஈடாகுமா............
என் ஜீவனையே வைத்தாலும்
உன் அன்பிற்கு ஈடாகுமா...........
உன் பிறந்த நாள் பரிசாக‌
நானென்ன கொடுத்திட முடியும்.........

நான் காணாத இறைவா.....
என் அம்மாவின் பிறந்த நாளில்
வரமொன்று கேட்கின்றேன் உன்னிடம்
அவரை என்றும் மறவாத
மனங் கொடு எனக்கு
என்றென்றும் நேசிக்கும்
இதயங் கொடு எனக்கு
அம்மா அம்மா என்றழைக்கும்
ந‌ல்குரல் கொடு எனக்கு.........
இன்னும் ஏழேழுபது
ஜென்மம் வந்தாலும்
அவரையே எனக்கு
"அன்னையாய்" கொடுத்திடு..............